Skip to main content

dumpyards

40 வருட கொடுங்கையூர் குப்பைமேட்டிற்கு பயோ மைனிங் தீர்வா?  

பல வருடங்களாக கொடுங்கையூர் மக்கள் இந்த ஒரு வாக்கியத்தை கேட்டு கேட்டு அலுத்து விட்டார்கள் - அதாவது, கொடுங்கையூர் குப்பைமேடு சுத்தமாகிவிடும்; மேலும், அந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படும். இதை கேட்ட பிள்ளைகளின் பிள்ளைகள் இன்று பள்ளி செல்ல தொடங்கிவிட்டார்கள், ஆனால் அங்கே மாற்றம் ஏதும் நடந்திடவில்லை. இன்று மீண்டும் அந்த வார்த்தைகள் கொடுங்கையூர் வீதிகளில் உலாவருகிறது. இம்முறை கொஞ்சம் மும்முரமாக வேலைகளும் நடந்துகொண்டு இருப்பதால், அங்குள்ள மக்களும் மிகவும் நம்பிக்கையாக உள்ளார்கள்.